வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது

தாத்ராநகர் ஹைவேலி சில்வாசா வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது
சில்வாசா,
தாத்ராநகர் ஹைவேலி சில்வாசா பகுதியில் மயில்களை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனத்துறையினர் கலவுண்டா வனப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் சேர்ந்து அங்கு மயில்களை வேட்டையாடி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பெயர் சுவப்னில் பட்டேல், தேஜஸ் பட்டேல் என தெரியவந்தது. 2 பேரையும் வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





