ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.25 லட்சம் அபேஸ் - 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.25 லட்சம் அபேஸ் - 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Oct 2023 7:15 PM GMT (Updated: 13 Oct 2023 7:15 PM GMT)

ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.25 லட்சம் வரை திருடிய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

தானே,

தானே மாவட்டம் மான்பாடா போலீசில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் திருட்டு போவதாக புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரையில் 3 ஏ.டி.எம். எந்திரங்களில் அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதேபோல கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரையில் டோம்பிவிலி பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ரூ.18 லட்சத்து 99 ஆயிரத்தை அபேஸ் செய்தது. மொத்தம் ரூ.25 லட்சத்து 65 ஆயிரம் வரையில் ஏ.டி.எம் எந்திரங்களில் நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் 10 பேருக்கு தொடர்பு இருப்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story