சத்தாராவில் இருந்து மும்பைக்கு புலித்தோல், நகங்கள் கடத்தி வந்த 3 பேர் சிக்கினர்


சத்தாராவில் இருந்து மும்பைக்கு புலித்தோல், நகங்கள் கடத்தி வந்த 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 18 Sep 2023 7:15 PM GMT (Updated: 18 Sep 2023 7:16 PM GMT)

சத்தாராவில் இருந்து மும்பைக்கு புலித்தோல், நகங்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்

மும்பை,

மும்பை போரிவிலி மேற்கு பகுதியில் வனவிலங்குகளின் உடல் உறுப்புகளை கும்பல் கடத்தி வரவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். எல்.ஐ.சி. மைதானத்தில் சந்தேகப்படும்படி 3 பேர் நடமாடியதை கண்டனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் சத்தாரா மாவட்டம் மகாபலேஷ்வரை சேர்ந்த சூரஜ் கரண்டே (வயது30), மொகசின் (35), மன்சூர் மான்கர் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் புலித்தோல் மற்றும் 12 நகங்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இவர்கள் இதை மும்பையில் விற்க முயன்றதாக தெரியவந்தது. இது குறித்து போலீசார் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.


Next Story