மின்னல் தாக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் பலி


மின்னல் தாக்கி 5 பெண்கள் உள்பட 6 பேர் பலி
x
தினத்தந்தி 26 July 2023 7:45 PM GMT (Updated: 26 July 2023 7:45 PM GMT)

சந்திராப்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதால் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

சந்திராப்பூர்,

சந்திராப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண் ஒருவர் காயம் அடைந்தார். இதுகுறித்த தகவல்கள் வருமாறு:-

சிந்தேவாடி தாலுகாவில் உள்ள தேலான்வேதி கிராமத்தில் நேற்று பெண்கள் சிலர் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் 45 மற்றும் 47 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் போபுர்னா தாலுகாவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர். அதேபோல பிரம்மபுரி தாலுகாவில் உள்ள பெட்டலா கிராமத்தில் மின்னல் தாக்கி 35 வயது பெண்ணும், கோர்பா தாலுகாவில் ஒரு விவசாயியும் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை கோண்பிபாரி தாலுகாவில் 35 வயது பெண் ஒருவர் மின்னல் தாக்கியதில் இறந்தார்.


Next Story