12 வயது சிறுமியை கடத்தி பண்ணை வீட்டில் சிறைவைப்பு- வாலிபர் கைது


12 வயது சிறுமியை கடத்தி பண்ணை வீட்டில் சிறைவைப்பு- வாலிபர் கைது
x

வாடாவில் 12 வயது சிறுமியை கடத்தி சென்று பண்ணை வீட்டில் சிறைவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

வசாய்,

வாடாவில் 12 வயது சிறுமியை கடத்தி சென்று பண்ணை வீட்டில் சிறைவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமி கடத்தல்

பால்கர் மாவட்டம் வாடா தாலுகா பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தாள். அப்போது காரில் வந்த கும்பல் சிறுமியை கடத்தி சென்றனர். இதுபற்றி அறிந்த பெற்றோர் வாடா போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர். தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு பல இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் வாடாவில் உள்ள பண்ணை வீட்டில் கடத்தப்பட்ட சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்தது.

வாலிபர் கைது

இதன்பேரில் இன்று அதிகாலை அங்கிருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்தி சென்ற ஒருவரின் அடையாளம் போலீசாருக்கு தெரியவந்தது. இதில் சமீர் தாக்கரே (வயது30) என்பவரை பிடித்து கைது செய்தனர்.

இவர் சிறுமியின் பெற்றோருடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தீர்க்க பழிவாங்கும் நோக்கத்துடன் சிறுமியை தனது 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சென்றதாக தெரியவந்தது. இதனால் போலீசார் 2 கூட்டாளிகளை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story