7-வது மாடியில் இருந்து குதித்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை


7-வது மாடியில் இருந்து குதித்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2023 8:00 PM GMT (Updated: 8 Oct 2023 8:00 PM GMT)

7-வது மாடியில் இருந்து குதித்து நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

7-வது மாடியில் இருந்து குதித்து நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர் தற்கொலை

மராட்டிய மாநிலம் நாக்பூர் மன்காப்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் மொயின் சேக் நவ்சாத்(வயது19). இவர் அங்குள்ள மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு 8.20 மணியளவில் அவர் நீட் பயிற்சி மையம் அருகில் உள்ள கட்டிடத்தின் 7-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து திடீரென கீழே குதித்தார். இதுபற்றி கட்டிட காவலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் மாணவரை மீட்டு அருகில் உள்ள மயோ அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த மன்காப்பூர் போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் மொயின் சேக் நவ்சாத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story