வசாய் தொழிற்பேட்டையில் பயங்கர தீ; விடிய, விடிய போராடி தீ அணைப்பு


வசாய் தொழிற்பேட்டையில் பயங்கர தீ; விடிய, விடிய போராடி தீ அணைப்பு
x
தினத்தந்தி 21 Oct 2023 7:30 PM GMT (Updated: 21 Oct 2023 7:31 PM GMT)

வசாய் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விடிய விடிய போராடி தீயை அணைத்தனர்.

வசாய்,

வசாய் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விடிய விடிய போராடி தீயை அணைத்தனர்.

பயங்கர தீ

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பற்றிய தீ அருகில் உள்ள பணிமனை, குடோன்களிலும் பற்றி எரிய தொடங்கியது. இது பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்றனர். அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடி அங்கு பற்றிய தீயை நேற்று காலை 6.30 மணி அளவில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

10 இடங்கள் எரிந்து நாசம்

தீ விபத்தில் இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட் வளாகத்தில் இருந்த தனியாருக்கு சொந்தமான 10 இடங்கள் தீயில் கருகி நாசமானது. தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. குளிர்விக்கும் பணி தொடந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story