பச்சிளங்குழந்தையை கொன்று உடலை வீசிய கொடூர தாய் கைது


பச்சிளங்குழந்தையை கொன்று உடலை வீசிய கொடூர தாய் கைது
x
தினத்தந்தி 15 Sep 2023 7:30 PM GMT (Updated: 15 Sep 2023 7:31 PM GMT)

பிறந்து 4 நாளே ஆன பச்சிளங்குழந்தையை கொன்று உடலை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

பிறந்து 4 நாளே ஆன பச்சிளங்குழந்தையை கொன்று உடலை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை கொலை

பால்கர் கிவ்வாலி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா (வயது30). இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இவரது கணவர் வீட்டினர் ஆண் குழந்தை வேண்டுமென்று விருப்பப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ஸ்ரேயா கடந்த 4-ந் தேதி இரவு 11.30 மணி அளவில் பிறந்து 4 நாளே ஆன பச்சிளங்குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி கிவ்வாலி கம்போட் சாலையில் வீசிவிட்டு பொய்சரில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நாடகமாடினார்

இதையடுத்து கடந்த 11-ந்தேதி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் ஸ்ரேயா வீட்டிற்கு வந்தனர். குழந்தையின் பிறப்பு குறித்து பதிவு செய்ய ஸ்ரேயாவிடம் விசாரித்தனர். இதற்கு வான்காவில் வசிக்கும் உறவினர் வீட்டில் குழந்தை இருப்பதாக அவர் நாடகமாடினார். இதனால் சந்தேகம் அடைந்த சுகாதார ஊழியர்கள் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். இதில் கடந்த 5-ந்தேதி பிறந்த குழந்தை இல்லாமல் வெறும் கையுடன் ஸ்ரேயா வந்ததாக தெரிவித்தனர்.

பெண் கைது

இதுபற்றி சுகாதார ஊழியர்கள் தாராப்பூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் ஸ்ரேயாவிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை கொன்று விட்டு நாடகமாடிய தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து பச்சிளங்குழந்தையை வீசி சென்ற இடத்திற்கு போலீசார் சென்று உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரேயாவை கைது செய்தனர். ஸ்ரேயாவின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தகானுவில் உள்ள மாகிமில் வசித்து வருவது தெரியவந்தது.


Next Story