மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு
எம்.பி.பி.எஸ். மாணவியை மானபங்கம் செய்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
எம்.பி.பி.எஸ். மாணவியை மானபங்கம் செய்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தேர்வில் தோல்வி
நாக்பூரை சேர்ந்த 21 வயது மாணவி பால்கரில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் தேர்வில் ஒரு பாடத்தில் மாணவி தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 2-ந் தேதி மாணவியை பேராசிரியர் ஒருவர் அவரது அறைக்கு அழைத்தார். அப்போது பேராசிரியர், தேர்வில் தோல்வி அடைந்தது குறித்து மாணவியிடம் கேட்டார்.
மாணவி மானபங்கம்
அவர் தேர்வில் தோ்ச்சி பெற, தனக்கு சில விஷயங்களை செய்ய வேண்டும் என கூறி மாணவியை தொட்டு மானபங்கம் செய்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்ற மாணவி நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். பின்னர் மாணவியும், அவரது தாயும் சம்பவம் குறித்து பால்கர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.