வாகன நிறுத்தத்தில் தீ; 15 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்


வாகன நிறுத்தத்தில் தீ; 15 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாகன நிறுத்தத்தில் தீப்பிடித்ததில் 15 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய், நைகாவ் பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் வாகன நிறுத்தத்தில் வாகனங்கள் மீது பிடித்த தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர். விபத்தில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சுமார் 15 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன நிறுத்தத்தில் தீப்பிடித்து இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமான சம்பவத்தால் வசாய் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story