பெண்ணை கொன்று உடலை வீசி சென்ற கணவர், கூட்டாளி கைது


பெண்ணை கொன்று உடலை வீசி சென்ற கணவர், கூட்டாளி கைது
x
தினத்தந்தி 13 Jun 2023 8:00 PM GMT (Updated: 14 Jun 2023 6:23 PM GMT)

பெண்ணை கொன்று உடலை வீசி சென்ற கணவர், கூட்டாளி போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்ராவில் உள்ள கால்வாயில் கடந்த மாதம் 27-ந்தேதி போர்வையால் சுற்றப்பட்டு பெண்ணின் உடல் கிடந்ததை போலீசார் மீட்டனர். இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் மும்பை வெர்சோவாவை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். சந்தேகம் படும்படியாக ஆட்டோ ஒன்று நகர்ந்து சென்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது. இதன் பதிவெண் மூலம் நடத்திய விசாரணையில் பெண்ணின் கணவர் நவாப் சேக் (வயது27), கூட்டாளி சல்மான் ஆகியோர் சேர்ந்து பெண்ணின் உடலை வீசி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சல்மானை பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பதுங்கி இருந்த நவாப் சேக்கை பிடித்து கைது செய்தனர். நடத்தையில் சந்தேகம் காரணமாக பெண்ணை கொலை செய்து உடலை வீசி சென்றதாக தெரிவித்தனர்.


Next Story