உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாராகிரி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாராகிரி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
x

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாராகிரி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மும்பை,

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தாராகிரி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தாராகிரி கப்பல்

இந்தியாவில் திட்டம் 17-ஏ என்ற பெயரில் உள்நாட்டில் போர் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2 கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இந்தநிலையில் 3-வது கப்பலாக ஸ்டில்த் பிரிகேட் தாராகிரி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் நேற்று மும்பை மஜ்காவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கடற்படை துணை தளபதி அஜேந்திர பகதூர் சிங் முன்னிலையில் புதிய கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக கப்பல் அர்ப்பணிப்பு விழா எளிமையாக நடந்தது.

நவீன தொழில்நுட்பம்

நாட்டுக்கு புதிதாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள தாராகிரி கப்பல் 2 ஆயிரத்து 738 டன் எடை கொண்டது. அதிநவீன மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இது உலகத்தில் உள்ள அதிநவீன போர் கப்பல்களுக்கு நிகரானது.

மேலும் இந்த போர் கப்பலில் நவீன ஆயுதங்கள், சென்சார்கள், இயங்குதள மேலாண்மை இடம்பெற்று உள்ளன.


Next Story