சம்பாஜி பிடே விவகாரம்; பிரிதிவிராஜ் சவானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


சம்பாஜி பிடே விவகாரம்; பிரிதிவிராஜ் சவானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2023 12:30 AM IST (Updated: 2 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை,

அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்து அமைப்பை சேர்ந்த சம்பாஜி பிடே, மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பாஜி பிடேவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவானுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரிதிவிராஜ் சவானுக்கு மிரட்டல் விடுத்தது புனேவை சேர்ந்த அங்குஷ் சுரேடே என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

1 More update

Next Story