வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14¾ லட்சம் கொள்ளை - மர்மநபருக்கு வலைவீச்சு


வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14¾ லட்சம் கொள்ளை - மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 July 2023 7:30 PM GMT (Updated: 15 July 2023 7:31 PM GMT)

வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14.80 லட்சத்தை கொள்ளை அடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வசாய்,

வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14.80 லட்சத்தை கொள்ளை அடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பணம் கொள்ளை

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பொய்தாபாடா பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று காலை அங்கு ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதாக வாலிவ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் எந்திரத்தில் இருந்த ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிகாலை வேளையில் மக்கள் நடமாட்டம் யாரும் இல்லாத சமயத்தில் மர்மநபர் உள்ளே புகுந்து எந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. போலீசார் கொள்ளை ஆசாமியை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 3-ந்தேதி வசாய் கிழக்கு கோலானி நாக்காவில் இருந்த ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது சம்பவமாக ரூ.14 லட்சம் கொள்ளை போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story