இளம்பெண் கத்தியால் குத்தி கொலை


இளம்பெண் கத்தியால் குத்தி கொலை
x

கோவண்டியில் தன்னுடன் தொடர்பை துண்டித்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

கோவண்டியில் தன்னுடன் தொடர்பை துண்டித்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்பு துண்டிப்பு

மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் பவுசியா கான் (வயது18). இவர் அதே பகுதியை சே்ாந்த 20 வயது வாலிபருடன் பழகி வந்தார். நாளடைவில் வாலிபரின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடனான தொடர்பை துண்டித்து கொண்டார். இதனால் வாலிபர் தன்னை நிராகரித்த பவுசியா கான் மீது முன்விரோதம் கொண்டார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் வாலிபர் இளம்பெண் பவுசியா கான் வீட்டிற்குள் திடீரென புகுந்தார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தன்னை நிராகரித்தற்கான காரணம் குறித்து தெரிவிக்கும்படி வாக்குவாதம் செய்தார். அப்போது திடீரென தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண் காலில் குத்தி உள்ளார். இதனால் இளம்பெண் பவுசியா கான் அங்கிருந்து தப்பி ஓட முடியவில்லை.

குத்தி கொலை

இதன்பின்னர் இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து வாலிபர் தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பவுசியா கானை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுசியா கான் உயிரிழந்தார்.

இது குறித்து தேவ்னார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த வாலிபரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அவர்களையும் பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story