இளம் காதல் ஜோடி தற்கொலை


இளம் காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 8 Sep 2023 7:15 PM GMT (Updated: 8 Sep 2023 7:15 PM GMT)

நாக்பூரில் இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

மும்பை,

நாக்பூர் மாவட்டம் பர்சேனி தாலுகா பந்தாரி கிராமத்தை சேர்ந்தவர் கவுரவ் பாக்மாரே(வயது18). இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் 2 பேரும் தூக்கில் தொங்கியப்படி பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story