சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் சாய்னா நேவால் தோல்வி

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனையிடம் சாய்னா நேவால் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
பெய்ஜிங்,
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்று புஜோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் 2- சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தரவரிசையில் 4 ஆம் இடம் வகிக்கும் ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுச்சி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21-18, 21-11 என்ற செட் கணக்கில் அகனே வெற்றி பெற்றார். இதன் மூலம் சாய்னா நேவால் போட்டித்தொடரில் இருந்து வெளியேறினார். நடப்பு ஆண்டில் மட்டும் யமாகுச்சியிடம் சாய்னா நேவால் நான்கு முறை தோல்வி அடைந்துள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய், 53-வது இடத்தில் உள்ள சேக் யியூ லீ என்ற சீன நாட்டைச்சேர்ந்த வீரரை எதிர்கொண்டார். 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21-19,21-17 என்ற செட் கணக்கில் பிரனாய் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்திய வீராங்கனை பிவி சிந்து மட்டுமே தற்போது, இந்த தொடரில் நீடித்து வருகிறார்.
Related Tags :
Next Story