காமன்வெல்த் போட்டி: குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்


காமன்வெல்த் போட்டி: குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 14 April 2018 5:11 AM GMT (Updated: 14 April 2018 5:11 AM GMT)

காமன்வெல்த் போட்டியின் குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார். #CWG2018

கோல்டு கோஸ்ட்,

21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இந்த விளையாட்டுத் திருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய வீரர், வீராங்கனைகளின் பதக்க வேட்டை தொடருகிறது.

காமன்வெல்த் போட்டியின் குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்.

அவர் வடக்கு அயர்லாந்தின் பிரெண்டன் இர்வைன் உடன் மோதினார். இந்தப் போட்டியில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று கவுரவ் சோலாங்கி தங்கப் பதக்கத்தினைத் தட்டிச் சென்றுள்ளார். இது இந்தியாவுக்கு இன்று கிடைத்த 2வது தங்கம் ஆகும்.

இதன் மூலம் இந்தியா 20 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட 46 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.


Next Story