டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி


டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்:  இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 Aug 2021 3:28 AM GMT (Updated: 27 Aug 2021 3:28 AM GMT)

டோக்கியோ பாராஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.




டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.  மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியின் 4வது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில், ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார்.  இந்த போட்டியில் வெற்றி பெற்ற பவீனா காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


Next Story