பாராஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு வெள்ளி பதக்கம்!


பாராஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு வெள்ளி பதக்கம்!
x
தினத்தந்தி 3 Sep 2021 3:22 AM GMT (Updated: 3 Sep 2021 3:22 AM GMT)

பாராஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர்  உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் விளையாடினார்.

அதில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை பிரவீன்குமார் பதிவு செய்தார். கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார் பிரவீன்குமார்.

பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்.

நடப்பு பாராஒலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.


Next Story