சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1¼ கோடி காணிக்கை


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1¼ கோடி காணிக்கை
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1¼ கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.ஒரு கோடியே 26 லட்சத்து 35 ஆயிரத்து 749 ரொக்கமும், 2 கிலோ 546 கிராம் தங்கமும், 6 கிலோ 457 கிராம் வெள்ளியும், மேலும், 254 அயல் நாட்டு பணம் மற்றும் 1411 அயல் நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story