ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க 1-ந்தேதி வரை நீட்டிப்பு


ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க 1-ந்தேதி வரை நீட்டிப்பு
x

டாஸ்மாக் பாரில் தின்பண்டம் விற்பனை-காலி பாட்டில்கள் சேகரிக்க ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க 1-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடத்தில் (பார்) தின்பண்டம் விற்பனை மற்றும் காலி பாட்டில்கள் சேகரம் செய்து கொள்ள இணைய வழி மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி வரை என்று இருந்தது. தற்போது ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற 1-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது, என்று ஒருங்கிணைந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் (பொறுப்பு) விஜயசண்முகம் தெரிவித்துள்ளார்.


Next Story