ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை திருட்டு


ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை திருட்டு
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:46 PM GMT)

திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை திருட்டு

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம்-மரக்காணம் சாலை கோபாலபுரம், ராம் நகரை சேர்ந்தவர் சின்னராஜ். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி விஜயலட்சுமி(வயது 52) மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு சென்னையில் படித்து வரும் தனது மகனை பார்த்து வருவதற்காக சென்றார். இடையில் விஜயலட்சுமியின் தங்கை மகன் ரஞ்சித்குமார் சென்னையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்து வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், டி.வி. பாக்ஸ் ஆகியவற்றை எடுத்துச் சென்றார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்த விஜயலட்சுமி அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தொியவந்தது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த திண்டிவனம் போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் இது குறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story