கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1½ டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வரத்து


கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1½ டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வரத்து
x

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1½ டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வரத்துகண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1.467 டி.எம்.சி. கிருஷ்ணாநீர் வந்தடைந்தது.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 4-ம் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவது வழக்கம். அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீர் அதிகமாக பயன்படுத்தும் போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைவதும், தண்ணீர் பயன்பாடு குறைத்துக் கொண்டால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாவதுமாக உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 568 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மே 4-ந் தேதி முதல் நேற்று காலை வரை 1.467 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29. 68 அடியாக பதிவாகியது. இதில் 1.666 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Next Story