பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 10 பவுன் செயினை மர்மநபர் பறித்து சென்றார்.
சிவகாசி,
சிவகாசி நடராஜாகாலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கிரகலட்சுமி (வயது 49). இவர் சிவகாசி முண்டகன் நாடார் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்களில் வந்த மர்மநபர் ஒருவர் கிரகலட்சுமி கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிரகலட்சுமி சிவகாசி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





