திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்


திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:46 PM GMT)

கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சோமவாரம்

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நவக்கிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலமாக விளங்குகிறது.இந்த கோவிலில் ஒவ்வொரு கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

1,008 சங்காபிஷேகம்

அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி நேற்று 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு 1,008 சங்குகள், இடம் மற்றும் வலம்புரி சங்கு ஆகியவை சிவ வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டு, நறுமண பொருட்கள் கொண்டு புனித நீரால் நிரப்பப்பட்டது.இதையடுத்து சிறப்பு ஹோமமும், சங்குகளுக்கு அர்ச்சனையும் செய்யப்பட்டு வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவேதாரண்யேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடந்தது.

ஜம்புகேஸ்வரர் கோவில்

இதனை தொடர்ந்து 1,008 சங்குகளால் அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.இதேபோல கொள்ளிடம் அருகே வடரங்கம் ஜம்புகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. 108 சங்குகள் சிவ லிங்கம் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story