108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்


108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்
x

ஜெயங்கொண்டம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னக்கல்லேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவரது மனைவி மலர்க்கொடி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மலர்க்கொடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கல்லாத்தூர் மெயின் ரோட்டிற்கு வந்தபோது அவருக்கு பிரசவ வலி அதிகரித்ததால் மருத்துவ செவிலியர் முத்துக்குமரன், ஆம்புலன்ஸ் டிரைவர் ஸ்ரீதர் ஆகியோர் பிரசவத்திற்கு தேவையான உதவிகளை செய்தனர். பின்னர் மலர்க்கொடிக்கு 108 ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, அவர்கள் இருவரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தாய், சேய் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசர காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவ செவிலியர் மற்றும் டிரைவர் ஆகியோரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story