10-ம் வகுப்பு கணிதத்தேர்வு 45,618 மாணவர்கள் ஆப்சென்ட் - தேர்வுத்துறை தகவல்


10-ம் வகுப்பு கணிதத்தேர்வு 45,618 மாணவர்கள் ஆப்சென்ட் - தேர்வுத்துறை தகவல்
x

இன்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 10-ம் பொதுத்தேர்வு 6-ந் தேதியும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதியும் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு கணித தேர்வை 45 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என்பது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story