தமிழகத்தில் 11 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்


தமிழகத்தில் 11 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 Jan 2024 9:21 AM GMT (Updated: 27 Jan 2024 9:28 AM GMT)

காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

1. ஆர். ஸ்ரீநிவாசப்பெருமாள், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்

2. பாகர்லா செபாஸ் கல்யாண், ஐபிஎஸ்., சென்னை தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (பொருளாதார குற்றப்பிரிவு) இடமாற்றம்

3. எஸ்.சக்திவேல், சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி.) இடமாற்றம்

4. ஆர்.பாண்டியராஜன், கொளத்தூர் காவல் துணை ஆணையராக இடமாற்றம்

5. டாக்டர் பி. சாமிநாதன், ஐபிஎஸ்., தென் சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு) இடமாற்றம்

6. வி. சியாமளா தேவி, சென்னை காவல் கண்காணிப்பாளராக ( மத்திய புலனாய்வு பிரிவு, தடை குற்றப்பிரிவு) இடமாற்றம்

7. வி. சரவண குமார், வட சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (விஜிலென்ஸ் மற்றும் ஊழல் எதிர்ப்பு) இடமாற்றம்

8. அபிஷேக் குப்தா, ஐபிஎஸ்., திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்

9. ரோகித் நாதன் ராஜகோபால், ஐபிஎஸ்., கோவை வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) இடமாற்றம்

10. எம். ராஜராஜன், திருப்பூர் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) இடமாற்றம்

11. ஜி.எஸ்.அனிதா, திருநெல்வேலி நகர காவல் துணை ஆணையராக (தலைமையகம்) இடமாற்றம்





Next Story