ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு


ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:46 PM GMT)

தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் இறந்தது.

தென்காசி

செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரம் வரை செல்லும் விரைவு ெரயில் நேற்று மாலை 3.55 மணிக்கு புறப்பட்டது. இந்த ெரயில் தென்காசி கீழப்புலியூர் பகுதியில் 4.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ெரயில் பாதையில் படுத்திருந்த 12 ஆடுகள் மீது ெரயில் மோதியது. இதில் 12 ஆடுகளும் அந்த இடத்திலேயே இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பக விநாயகம் மற்றும் போலீசார் சென்று இறந்து கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ெரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story