விவசாயி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே எடப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). விவசாயியான இவர் தனது வீட்டின் பீரோவில் நகைகள் மற்றும் பணத்தை வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலை பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.5½ லட்சமாகும்.
இதுகுறித்து ஆறுமுகம், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நகை திருட்டுப்போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





