கார் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது


கார் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
x

மதுரையில் கார் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை ஆனையூர் கோபிநாத் நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 38). இவர் அண்ணா பஸ்நிலைய பகுதியில் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வேலை பார்த்த பெண் ஊழியரை உரிமையாளர் நிறுத்தி விட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஊழியரின் கணவர் மதிகுமார், அவரது நண்பர் மாணிக்கத்துடன் கடைக்கு வந்தார். அங்கு மனோஜ்குமாரிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்து, அவரது கார் கண்ணாடியை உடைத்து விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story