கீரம்பூர் அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 2 ேபர் பலி 5 பேர் படுகாயம்


கீரம்பூர் அருகே  கார் கவிழ்ந்து பெண் உள்பட 2 ேபர் பலி  5 பேர் படுகாயம்
x

கீரம்பூர் அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

கீரம்பூர் அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

7 பேர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 47), சிவசாமி மகன் அழகுராஜா (31), கோவிந்தராஜ் மகன் கணேசன் (30), அம்சகொடி (50), ஜெயபாண்டியன் (42), அழகுராஜா மனைவி சுகன்யா (25), டிரைவர் பால்ராஜ் மகன் சிலம்பரசன் (32) உள்பட 7 பேர் ஒரு காரில் நேற்று கோடங்கிபட்டியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றனர்.

அப்போது கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையின் குறுக்கே ஒரு வாகனம் வந்தது. வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் திருப்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து இடதுபக்கத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சோகம்

இதில் காரில் இருந்த சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்து வலியால் அலறினர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரமத்தி போலீசார் படுகாயம் அடைந்த சுரேஷ், அழகுராஜா, கணேசன், அம்சகொடி மற்றும் டிரைவர் சிலம்பரசன் ஆகியோரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் உயிரிழந்த‌ சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story