சென்னை விமான நிலைய சுங்க இலாகா பிரிவுக்கு மேலும் 2 மோப்ப நாய்கள்


சென்னை விமான நிலைய சுங்க இலாகா பிரிவுக்கு மேலும் 2 மோப்ப நாய்கள்
x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா மோப்ப நாய் பிரிவில் 3 மோப்ப நாய்கள் இருந்தன.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா மோப்ப நாய் பிரிவில் 3 மோப்ப நாய்கள் இருந்தன. அதில் போதைப் பொருளை கண்டுபிடிப்பதில் நிபுணத்துவமாக செயல்பட்ட இராணி என்ற மோப்ப நாய் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி கட்டாய ஓய்வில் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த இடத்தை நிரப்புவதற்கும், மோப்பநாய் பிரிவை விரிவுபடுத்துவதற்காகவும் புதிதாக ஒரு வயதுடைய மேலும் 2 மோப்ப நாய்கள் சென்னை விமான நிலைய சுங்க இலாகா மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த மோப்ப நாய்களுக்கு பஞ்சாப் மாநிலம் அட்டரியில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் 9 மாதங்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இதன் மூலம் விமான நிலைய சுங்க இலாகா மோப்பநாய் பிரிவில் உள்ள மோப்ப நாய்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளன. புதிதாக வந்துள்ள 2 மோப்ப நாய்களில் ஒன்று போதை பொருட்கள் கடத்தலை கண்டுபிடிப்பதில் அதிகம் நிபுணத்துவம் வாய்ந்தது. மற்றொரு மோப்ப நாய் சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் வன உயிரினங்கள் மற்றும் அபாயகரமான வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் போன்ற கடத்தல் பொருட்களை கண்டுபிடிக்கும் நிபுணத்துவம் வாய்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story