கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - கோர்ட் உத்தரவு


கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - கோர்ட் உத்தரவு
x

நைஜீரிய நாட்டினர் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள காபி கடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்தி திடீர் சோதனையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 2 நபர்களிடம் இருந்து 7 கிலோ எடை அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story