மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 46) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இதே போல் வீரசோழபுரம் கிராமத்தில் மதுபாட்டில்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பழனிமுத்து (63) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து மொத்தம் 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





