மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது


மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2023 7:30 PM GMT (Updated: 19 March 2023 7:31 PM GMT)
சேலம்

சேலம் சூரமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புது ரோடு அருகே சோளம்பள்ளம் பகுதியில் கந்தசாமி (வயது 54) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 231 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கன்னங்குறிச்சி போலீசார் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவேங்கடம் (45) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story