மார்த்தாண்டத்தில் மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது


மார்த்தாண்டத்தில் மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:46 PM GMT)

மார்த்தாண்டத்தில் மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் தக்கலையை சேர்ந்த நாகேந்திரன் (வயது 58) என்பவரும், பாகோடு ஏலாக்கரை பகுதியை சேர்ந்த மேரி (70) என்ற மூதாட்டியும் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் நாகேந்திரனிடம் இருந்து 5 மது பாட்டில்களும், மேரியிடம் 18 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story