வியாசர்பாடியில் வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரண்


வியாசர்பாடியில் வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரண்
x

வியாசர்பாடியில் வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரணடைந்தனர்.

சென்னை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பஜா கார்த்திக் (வயது 31). இவரை முன்விரோதம் காரணமாக கடந்த 14-ந் தேதி பெரம்பூரில் உள்ள சுடுகாட்டில் அவரது நண்பர்களே வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே காட்டான் மோகன், பிஸ்கா கார்த்திக், செந்தில்குமார், சரவணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளிளான மது என்ற மாதவன், சத்தியநாராயணன் ஆகிய 2 பேர் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், முக்கிய குற்றவாளி மாதவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story