மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது
தக்கலை:
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் நேற்று மதியம் தக்கலை அருகே உள்ள மணலி ஆற்று பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட ஜோஸ் (வயது48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். இதுபோல் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திக்கணங்கோடு, புதூர் பகுதியில் மது விற்பனை செய்த ஆல்பர்ட் (35) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





