மது, புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


மது, புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2023 6:45 PM GMT (Updated: 13 Jun 2023 10:19 AM GMT)

போடியில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி மீன் மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 4 மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போடி நாட்டாண்மைகாரர் தெருவை சேர்ந்த மணிபாரதி (வயது 29) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல், டி.வி.கே.கே. நகரில் உள்ள ஒரு பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 256 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளரான ரத்தினம் (65) என்பவரை கைது செய்தனர்.


Next Story