விழுப்புரம் அருகே பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

காலை 9.15 மணி ஆகியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் கலெக்டர் பழனி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக விழுப்புரம் அருகே கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை 9.15 மணி ஆகியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் கலெக்டர் பழனி, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
இந்த நிலையில் தற்போது பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் இருவரை பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#JUSTIN || விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
— Thanthi TV (@ThanthiTV) November 24, 2023
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அதிரடி உத்தரவு
கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பழனி
காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள்… pic.twitter.com/CdUuu4Nh51
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





