மதுபாட்டில்களை கடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் கைது


மதுபாட்டில்களை கடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2022 7:45 PM GMT (Updated: 22 Oct 2022 7:46 PM GMT)

மதுபாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

கொளத்தூர்:-

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணாமூச்சியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சூப்பர்வைசராக கொளத்தூரை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 41) என்பவரும், விற்பனையாளராக மாதேஷ் (39) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை மூடிய ஊழியர்கள் 2 பேரும் கடையில் இருந்த 700 மது பாட்டில்களை ஒரு சொகுசு காரில் கடத்தி சென்றனர். அப்போது கொளத்தூர் அருகே செங்கல் மேடு என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் சென்ற சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் 700 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் தீபாவளி அன்று சந்து கடைகளில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 700 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story