குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

மதுரையில் குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்
சிவகங்கை மாவட்டம் பெரிய ஆவாரங்காடு வீரவளவு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் சதீஷ்குமார் (வயது 28). சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரநாடு பகுதியை சேர்ந்தவர் பிச்சை மகன் குமார் (39). இவர்கள் இருவர் மீது மதுரையில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





