பெண்ணிடம் 2¼ பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 2¼ பவுன் சங்கிலி பறிப்பு
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை சங்கரதேவன் குடிகாடு, எழில் நகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாராணி (வயது 58). சம்பவத்தன்று இவர் பஸ்சில் தஞ்சைக்கு சென்றுவிட்டு பூண்டி பஸ்நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் உமாராணியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் கிடந்த 2¼ பவுன் சங்கலியை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





