தேனி: ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு


தேனி: ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 16 April 2019 4:53 PM GMT (Updated: 16 April 2019 4:53 PM GMT)

தேனி, ஆண்டிப்பட்டியில் பண பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனி,

தேனி, ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் சோதனை செய்ய முயன்ற போலீசாரை, தொண்டர்கள் தடுக்க முயன்றபோது, போலீசார்  4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. அலுவலகத்திற்குள் சோதனை செய்ய சென்ற தேர்தல் பறக்கும் படை சென்றனர். அப்போது தொண்டர்கள் தடுத்ததால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீசாரை அ.ம.மு.க. கட்சியினர் தாக்க முயன்றதால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தற்காப்புக்காகவே துப்பாக்கியால் சுட்டதாகவும் யாருக்கும் காயமில்லை எனவும் எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 

Next Story