தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் நியமனம் பற்றி அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை


தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் நியமனம் பற்றி அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை
x
தினத்தந்தி 25 May 2019 11:57 AM GMT (Updated: 25 May 2019 11:57 AM GMT)

தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் நியமனம் பற்றி அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் வேலூர் தவிர 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது.  இந்த தேர்தலில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் (விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியை தவிர), அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதற்காக டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ராசா உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Next Story