தமிழகத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசினார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 44 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் 35 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 797 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசினார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 44 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் 35 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 797 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,344 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story