பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.79- ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 97.59 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 102.10 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 97.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story