ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்


ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேருக்கு  27ம் தேதி வரை நீதிமன்ற  காவல்
x

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது

சென்னை,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

இந்த நிலையில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை ஊர்க் காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story